” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ப.வை. ஜெயபாலன்


“சந்தம் சிந்தும் சந்திப்பு 264
“விழிப்பு”

“புகை வண்டிப் பயணத்தின் போது
போய் ஒரு நிகழ்வாலே மீள்வத்த போது
நகைப் பொலி கும்மாளம் நண்பர்
நால் ஐந்து பேர் சேர்ந்து
வெறி ஏறி பன்பல்

பணம் தேடும் மார்க்கத்தை தேடி
பலரும் பல் வழிகளை கூறினர் வாரி
கணம் ஒன்றில் தேடலாம் கோடி
களவாடி னால்சேர்ந்து வங்கியை நாடி….

சொத்துகள் நிறை நங்கை யாளை
சொத்தியோ குருடோ கட்டினால் தாலி
கொட்டிடும் சீதனம் கோடி ,
குதிரையில் கட்டலாம் என்றெலாம் பாட….

கையிலே பழக் கூடை ஒன்றை
காவியே வித்திட கூவியே வந்த
பையனின் தோற்றத்தில் ஏழ்மை
பரிதாபம் பொங்க நான் நீட்டினேன் நோட்டு…

கையிலே பழங்களை தந்தான்
கணக்காக தர மீதி இன்றியே
நொந்தான்
பைய உன் முயற்சிக்கு இம்மீதி
பரிசென சொன்னதும் பதறியே வாடி…

உழைக்காத பணம் வேண்டாம் என்றான்
ஓடியே தேடி என் மீதியை தந்தான்
விழித்தனர் சிறுவனின் செயலால்
வேடிக்கை பேசியோர்
வெட்கி தலை குனிவாய்.”
-ப.வை.ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan