02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 263
30/04/2024 செவ்வாய்
“அழகு”
————
காலை இளம் கதிரோனும்,
கனிவு தருமிள வேனிலும்,
மாலை ஒளிதரு மதியவளும்,
மண்ணின் மாண்பு கூறிடுமே!
காவும், கவினுறு சோலையும்,
கடலது தருமலை யோசையும்,
மேவிடு நதிகளும், மலைகளும்,
மேதினிக் கழகு சேர்த்திடுமே!
பூமகள், நனிதரு ரோஜாவும்,
பூங்குழல் விரும்பிடும் மல்லியும்,
நாமகள் நயந்திடும் தாமரையும்,
நானிலம் கொண்ட நல்லழகே!
கொஞ்சு மொழி குயிலதுவும்,
கோவை இதழ் அஞ்சுகமும்,
மஞ்ஞை என்னும் மயிலதுவும்,
மண்ணின் மகத்துவ எழிலாமே!
துள்ளும் புள்ளி மானினமும்,
தொங்கிப் பாயும் முயலினமும்,
கொள்ளை அழகு சேர்த்திடுமே!
குவலயம் அழகு கொண்டிடுமே!
நன்றி
“மதிமகன்”
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...