” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 263
30/04/2024 செவ்வாய்
“அழகு”
————
காலை இளம் கதிரோனும்,
கனிவு தருமிள வேனிலும்,
மாலை ஒளிதரு மதியவளும்,
மண்ணின் மாண்பு கூறிடுமே!

காவும், கவினுறு சோலையும்,
கடலது தருமலை யோசையும்,
மேவிடு நதிகளும், மலைகளும்,
மேதினிக் கழகு சேர்த்திடுமே!

பூமகள், நனிதரு ரோஜாவும்,
பூங்குழல் விரும்பிடும் மல்லியும்,
நாமகள் நயந்திடும் தாமரையும்,
நானிலம் கொண்ட நல்லழகே!

கொஞ்சு மொழி குயிலதுவும்,
கோவை இதழ் அஞ்சுகமும்,
மஞ்ஞை என்னும் மயிலதுவும்,
மண்ணின் மகத்துவ எழிலாமே!

துள்ளும் புள்ளி மானினமும்,
தொங்கிப் பாயும் முயலினமும்,
கொள்ளை அழகு சேர்த்திடுமே!
குவலயம் அழகு கொண்டிடுமே!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan