திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 264
07/05/2024 செவ்வாய்
“விழிப்பு”
———-
மனிதரில் ஆயிரம் வகையுண்டு!
மனதிற்கு மாறும் குணமுண்டு!
நினைவதில் நீயதை வைத்துவிடு!
நிதமும் விழிப்புடன் இருந்துவிடு!

உள்ளத்தில் கபடம் வைத்திடுவர்!
உன்னையும் நம்பிட வைத்திடுவர்!
பள்ளத்தில் சாய்த்து வீழ்த்திடுவர்!
பாவியாய், தரமாய், நடித்திடுவர்!

உண்மை நண்பராய் துடித்திடுவர்!
உதவிக் கரங்களும் தந்திடுவர்!
வண்மை நெஞ்சம் கொண்டிடுவர்!
வாழ்வை நரகமாய் மாற்றிடுவர்!

இனங்கள் எல்லாம் ஒன்றென்பர்!
இடத்திற் கமையப் பேசிடுவர்!
சனங்கள் எல்லாம் சமமென்பர்!
சட்டெனத் தொனி மாற்றிடுவர்!

அவரவர் நிலம் அவர்க்கென்பர்!
ஆயிரம் கதைகள் சொல்லிடுவர்!
நவயுக புருஷராய் மாறிடுவார்!
நாடகம் எல்லாம் நடத்திடுவார்!

விழிப்பதை நீயும் கொண்டுவிடு!
விடுகதை எல்லாம் புரிந்துவிடு!
களிப்பதைப் பின்னே தள்ளிவிடு!
காலம் பொன்னென உணர்ந்துவிடு!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading