சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 268
04/06/2024 செவ்வாய்
“பெண்ணே!”
பேதை என்றிடும் மென்னவளே!
பெதும்பை என்ற சின்னவளே!
வாதை எல்லாம் சுமந்தவளே!
வெல்வாய் நீ உலகினையே!

கள்ளிப்பால் நஞ்சு ஊட்டியவர்,
கைலாயம் போய் சேர்ந்திட்டார்!
மன்னிப்பாய்,மற்றவர் மாறிட்டார்!
மாசுறு தவறை உணர்ந்திட்டார்!

உலகு போற்றுது உந்தனையே!
உண்மைப் பேறு பெற்றனையே!
பலமுடன் பலவும் கற்றனையே!
பாரில் புதுமை படைத்தனையே!

ஆகாய வெளியில் பறக்கிறாய்!
ஆணாய் தொழில் பார்க்கிறாய்!
நீயாக நிறுவனம் சமைக்கிறாய்!
நிலவுக்கும் நீயும் போகிறாய்!

ஆட்சியும் உன்னால் உருவாச்சு!
அரசு நடாத்துவதும் திருவாச்சு!
மீட்சியும் உலகினில் மேலாச்சு!
மின்னென உன்புகழ் பதிவாச்சு!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan