மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்:278
24/09/2024 செவ்வாய்
விடியுமா தேசம்?
————————
விடியுமா எங்கள் தேசம்?
வினவுது ஆஷா பாசம்!
படியுமா முரட்டுக் கேசம்?
படிந்திடின் விடியும் தேசம்!

அரசியலில் எம்மவர் வல்லவர்!
அண்டிப் பிழைப்பதில் மன்னவர்!
உரசல் பேச்சதில் உத்தமர்!
ஊரை ஏமாற்றிடக் கற்றவர்!

தீபாவளிக்கு விடியு மென்பர்!
தீந்தமிழும் சிறக்கு மென்பர்!
நாமாவளி சொல்வோ மென்பர்!
நாளைக்கே பெறுவோ மென்பர்!

உள்ளத்தில் தூய்மை இல்லை!
உணர்வதனில் தமிழும் இல்லை!
கள்ளத்தில் ஏதும் குறைவில்லை!
காவலுக்கு இங்கு எவருமில்லை!

பூனைக்கு யார்மணி கட்டுவது?
புதுவாழ்வு எப்போது எட்டுவது?
தானைக்கு யார்வழி காட்டுவது?
தரணிக்கு விடிவெவர் ஈட்டுவது?
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading