” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 288
03/12/2024 செவ்வாய்
பனிப் பூ
————-
ஆகாயம் கொட்டுதே பனிப்பூ
ஆஹா என்னவொரு வனப்பு
“பூ” தாயின் உடல்மூடும் விரிப்பு
பூக்களும் வெள்ளையான வியப்பு!

பனிவிழும் ஓர் மலர்வனம்
பகரும் அழகு தினந்தினம்-புல்
நுனிதனில் உன் புகலிடம்
பூத்தது போலே ஒளிரும் விதம்!

வெட்டை வெளி விலக்கில்லை
வீழும் இடமே ஒரே வெள்ளை
குட்டை குளி மறையும் நிலை
கூடவே வரும் சறுக்கும் தொல்லை!

கதிரவன் களவாடிய தண்ணீர்
காட்டுதே தன்வரவால் வெண்ணீர்
உதிரமும் உறைந்திடும் வன்னீர்
உறைந்திட உலகமே கண்ணீர்!

அழகிலும் உண்டிங்கு ஆபத்து
அதை உணர்த்திடும் பாங்கு-நீ
இளகிடும் போதும் உண்டிங்கு
இனம்தெரியாத குளிர் ஒன்று!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan