19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 293
28/01/2025 செவ்வாய்
கவியழகு
————-
கரு ஒன்று மலரும்-பின்
கை காலும் முளைக்கும்!
உரு தானே நகரும்-பின்
உணர் வதற்கு தெரியும்!
உள் நின்று துவளும் -தான்
உலா வரத் துடிக்கும்!
சொல் சொல்லாய் சேரும்-பின்
சோர் வின்றித் தொடரும்!
எதுகை மோனை இணையும்
எளிதாய் சந்தமும் சேரும்!
புதிய கற்பனை தோன்றும்-நல்
புத்துணர்வு தானே பிறக்கும்!
காலமும் கனிந்து வரும்- சிசு
கையில் வந்து சேரும்!
கவி தன் பெயரென்றும்-தன்
கவின் இதுவென்றும் கூறும்!
பிரமன் படைப்பதில்-தினம்
பிறப்ப திங்கு உயிர்கள்!
கவிஞன் உழைப்பினில்-உலகு
காண்பது அழகுக் கவிகள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...