மாற்றத்தின் ஒளியாய்..

வியாழன் கவி -2273 மாற்றத்தின் ஒளியாய்.. ஆண்டு ஒன்றின் அழகிய மலர்வில் அத்தனை உளங்களில் மாற்றத்தின் ஒளியாய் இருளெனும் துயரது இனி இல்லை...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்..

வசந்தா ஜெகதீசன் ஊற்றெடுக்கும் அறிவிற்குள் உலகே வசமாகும் நாற்றெடுத்துப் பொங்கலிட்டு நன்றி சொல்தல் முறையாகும் வேற்றகத்தே வாழ்ந்திடினும்...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

செல்வி நித்தியானந்தன் மாற்றத்தின் ஒளியாய் மாற்றத்தின் வரவாய் மாட்சிமை நிறைவாய் மங்காத ஒளியாய் மனதும் குளிர்வாய் தைமகளின் நகர்வாய் திருநாளும்விரைவாய் ஆதவன் கொடையாய் அகமும் ஆனந்தமாய் பொங்கல்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்- 295
11/02/2025 செவ்வாய்
“பங்கு நீ”
————-
அழகு நிலா வந்ததென,
அருகில் வந்து நின்றவளே!
பழகு தமிழ் பாவையென
பந்தம் பெருக்க வந்தவளே!

பங்கு நீயென அவன் பகர,
பாங்காய் ஏற்று நின்றவளே!
சிங்கப் பெண் எனப் புகழ,
சிலிர்த்து முகம் சிவந்தவளே!

அண்ணல் அவன் சீதைபோல்,
அன்பு கொண்டு அழைத்தவளே!
எண்ணம் நிறைய நிற்பவளே,
எழில் உருவான பெண்ணவளே!

திருமால் மனைவி திருமகளாய்,
தேவை உணர்ந்து அளிப்பவளே!
அருமை என்றெவர் புகழ்ந்தாலும்,
அடக்கம் கொண்டு மிளிர்பவளே!

சங்கம் வளர்த்த தமிழதுபோல்,
சந்தானம் செழிக்க வைப்பவளே!
பங்கு நீயாய் வாய்த்திடவே-அவன்
பாரினில் செய்த தவமென்ன!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan