” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 297
25/03/2025 செவ்வாய்
“நம்பிக்கை”
——————
இறைவன் அளித்ததோ இரு கை
இங்கு வேணும் இன்னொரு கை
இதயம் தந்திடும் இந்தக் கை
இகத்தில் இதன் பேர் நம்பிக்கை!

பொதிகள் சுமக்கும் இரு இறக்கை
போய் இறங்கும் என்ற நம்பிக்கை!
பொறிக்குள் சிக்கிய நம் வாழ்க்கை
பொறி இயந்திரம் மீதே நம்பிக்கை!

தண்டவாளம் மீதோடும் தொடரூந்து
தடம்புரளாது என்று ஒரு நம்பிக்கை!
சண்ட மாருத வேகத்தில் ஓடிடவே
சமநிலை தழும்பிடும், தவறும் நம்கை!

அயலவர் அறிந்தவர் தரும் கை,
அகத்துள் உள்ளதா என நினை!
ஆண்டவன் தந்திடும் அரும் கை,
அன்பினால் தந்ததே என நினை!

துதிக்கையான் பாதத்தில் வை கை
துவளாதுனை காத்திடும் அவன் கை
நினைக்கையில் வந்திடும் ஒரு கை
நித்தமும் கிடைத்திடும் நம்பிக்கை!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan