சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 297
25/03/2025 செவ்வாய்
“நம்பிக்கை”
——————
இறைவன் அளித்ததோ இரு கை
இங்கு வேணும் இன்னொரு கை
இதயம் தந்திடும் இந்தக் கை
இகத்தில் இதன் பேர் நம்பிக்கை!

பொதிகள் சுமக்கும் இரு இறக்கை
போய் இறங்கும் என்ற நம்பிக்கை!
பொறிக்குள் சிக்கிய நம் வாழ்க்கை
பொறி இயந்திரம் மீதே நம்பிக்கை!

தண்டவாளம் மீதோடும் தொடரூந்து
தடம்புரளாது என்று ஒரு நம்பிக்கை!
சண்ட மாருத வேகத்தில் ஓடிடவே
சமநிலை தழும்பிடும், தவறும் நம்கை!

அயலவர் அறிந்தவர் தரும் கை,
அகத்துள் உள்ளதா என நினை!
ஆண்டவன் தந்திடும் அரும் கை,
அன்பினால் தந்ததே என நினை!

துதிக்கையான் பாதத்தில் வை கை
துவளாதுனை காத்திடும் அவன் கை
நினைக்கையில் வந்திடும் ஒரு கை
நித்தமும் கிடைத்திடும் நம்பிக்கை!

நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan