பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 217
04/04/23 செவ்வாய்
“தவிப்பு”
———-
மனத்தில் நாளும் தவிப்பு!
மண்ணில் என்றும் இருப்பு!
கனத்தில் அதனின் சிறப்பு,
காலம் கொடுத்த அமைப்பு!

தாயுள் கருவின் தவிப்பு,
தரணி காணும் விருப்பு!
ஆயுள் முழுதும் நிலைப்பு!
அவனி தரும் அமைப்பு!

அணைகள் கொண்ட தவிப்பு,
அன்னை அவளின் வளர்ப்பு!
பிணைகள் தாராத தடுப்பு,
பிறழ்வு கொள்ளும் அமைப்பு!

பாலை உண்ணும் விருப்பு,
பண்டம் உடையும் முனைப்பு!
வேளை அறியாத நினைப்பு,
வேதனை தருமோர் தவிப்பு!

கற்றலை நாடும் முனைப்பு,
காலமது தந்திடும் சிறப்பு!
உற்சாக பானத்தின் உவப்பு,
உனக்குத் தாராது மதிப்பு!

விரும்புவது அமையும் தவிப்பு,
விளையாது வேளை விடுத்து!
கரும்பும் முற்றினாலே சுவைப்பு!
காலத்தின் எமக்கான படிப்பு!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading