மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 218
18/04/2023 செவ்வாய்
“சுடர்”
———
சுதந்திரச் சுடரைக் கையேந்தி
சுழன் றடித்தாறே நம்காந்தி
இதந்தரு வாழ்வு தனைவேண்டி
இணைந்தது கூட்டம் இடிதாங்கி!

அப்துல் கலாமெனும் அறிவுச்சுடர்,
அழைத்தது மாற்றக் காலவிடர்!
சிற்றூர் பேரூர் பேதமின்றி,
சிலிர்த்தன மரங்கள் வேரூன்றி!

விளக்கு ஏந்திய சீமாட்டி,
விளைத்தாள் நலமே சுடரேந்தி!
கிழக்கு மேற்கென்ற வரையின்றி
கிடைத்தார் திரேசா சுடராகி!

ஒலிம்பிக் கிண்ணச் சுடரொன்று,
உலகில் எரியும் தினமுண்டு!
வலிக்கும் பொழுதைத் தாம்மறந்து
வாழ்வர் மக்கள் களிப்புற்று!

ஈகைச் சுடரைப் பயமின்றி,
ஏந்தி வணங்கும் நிலைதோன்றி,
வாகை சூடித் தமிழினமும்,
வாழும் நிலையும் வரவேண்டும்!

நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading