19
Mar
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
19
Mar
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 226
13/06/2023 செவ்வாய்
“மணி”
———
தன்னைத் தானே அடிக்கும்!
தகவல் தரவும் துடிக்கும்!
உன்னைத் துயில் எழுப்பும்!
உலகை விழிப்பில் ஆழ்த்தும்!
காலை மாலை எதற்கும்,
கவலை இல்லை அதற்கும்!
வேலை தொடங்கு தற்கும்!
வேளை வரும்போ தடிக்கும்!
காளை கழுத்தில் குலுங்கும்!
கவர்ந்து மனதை இழுக்கும்!
நாளைத் தொடக்கி வைக்கும்!
நகரும் நேரம் துலக்கும்!
நெல்லுக் கதிருள் வாழும்!
நேரம் வரும்போ(து) முதிரும்!
அல்லும் பகலும் அசையும்!
அதனால் பார்வை தெரியும்!
அணியாய் திரண்டால் மின்னும்!
அழகாய்ச் சேலையில் ஒளிரும்!
துணியின் விலையைக் கூட்டும்!
துவைக்கும் வேலை தவிர்க்கும்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...