15
Jul
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
15
Jul
மாறியதே வாழ்க்கை (770) 17.07.2026
செல்வி நித்தியானந்தன் மாறியதே வாழ்க்கை
மாற்றம் கண்டிட்ட
பலரது வாழ்வு
மகிழ்சி சோகம்
தாங்கிய...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 229
செவ்வாய் 18/07/2023
“இயற்கை”
—————
இயற்கை என்னும் இனியவள்
இங்கும் அங்கும் உறைபவள்!
செயற்கை யென்பதன் எதிரவள்
சேவிக்கும் தெய்வம் ஆனவள்!
“வைகறை” யெனும் பெண்ணவள்
வர்ணம் கொண்ட அன்னவள்!
கைவளை குலுங்க காண்பவள்
“காலை”யின் தங்கை ஆனவள்!
“வசந்தம்” என்னும் மென்னவள்
வாலிப வயதின் கண்ணவள்!
நிசந்தான் வாழ்வென நினைத்தவள்
நீலி “கோடை”யால் அழிந்தவள்!
“தென்றல்” என்னும் தேவியவள்
தேனமு துண்னும் பாவியவள்!
முன்றல் மல்லியை முகர்ந்தவள்
மூத்தவள் “வாடை’யின் இளையவள்!
ஆழியின் மேனியில் உறைபவள்
“அலை”யெனும் நாமம் உடையவள்!
காளியாய் மாறும் குணத்தவள்
கண்களைப் பனிக்க வைப்பவள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...