பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 166
15/03/2022 செவ்வாய்
ஏழ்பிறப்பும் காணா எழில்!
——————————–
வயலோரம் குயிலொன்று
-துயிலெழுந்து கூவும்!
கயல்மீனும் கண்விழித்துக்
-காதலியை எழுப்பும்!

அஞ்சுகமும் தன்குரலில்
-கொஞ்சுமொழி பேசும்!
மஞ்ஞைகளும் மரகதமாம்
-மரக்கிளையில் துயிலும்!

கலைமானின் மருள்விழிகள்
-காவியங்கள் கூறும்!
தலைமீது கவர்க்கொம்பு
-தற்காப்புச் செய்யும்!

மலர்மீது வண்டினமும்
-மாயவலை வீசும்!
குலமகளாம் அவள்மீது
-வீழ்ந்து இசைபாடும்!

தவளையும் தம்குரலில்
-தம்பூரா மீட்கும்!
குவளையும் இதழ்விரித்து
-குவலயத்தை ஈர்க்கும்!

மலையோரம் மா நதியும்
-மகிழ்வாய் நடமாடும்!
அலைபாயும் ஆழ்கடலும்
-அருமுத்துக் குளிக்கும்!

எழிலான இயற்கையவள்
எழில்நடனம் புரிவாள்!
ஏழ்பிறப்பும் காணவொணா
-எழிலதனைத் தருவாள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading