மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 166
15/03/2022 செவ்வாய்
ஏழ்பிறப்பும் காணா எழில்!
——————————–
வயலோரம் குயிலொன்று
-துயிலெழுந்து கூவும்!
கயல்மீனும் கண்விழித்துக்
-காதலியை எழுப்பும்!

அஞ்சுகமும் தன்குரலில்
-கொஞ்சுமொழி பேசும்!
மஞ்ஞைகளும் மரகதமாம்
-மரக்கிளையில் துயிலும்!

கலைமானின் மருள்விழிகள்
-காவியங்கள் கூறும்!
தலைமீது கவர்க்கொம்பு
-தற்காப்புச் செய்யும்!

மலர்மீது வண்டினமும்
-மாயவலை வீசும்!
குலமகளாம் அவள்மீது
-வீழ்ந்து இசைபாடும்!

தவளையும் தம்குரலில்
-தம்பூரா மீட்கும்!
குவளையும் இதழ்விரித்து
-குவலயத்தை ஈர்க்கும்!

மலையோரம் மா நதியும்
-மகிழ்வாய் நடமாடும்!
அலைபாயும் ஆழ்கடலும்
-அருமுத்துக் குளிக்கும்!

எழிலான இயற்கையவள்
எழில்நடனம் புரிவாள்!
ஏழ்பிறப்பும் காணவொணா
-எழிலதனைத் தருவாள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading