14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 166
15/03/2022 செவ்வாய்
ஏழ்பிறப்பும் காணா எழில்!
——————————–
வயலோரம் குயிலொன்று
-துயிலெழுந்து கூவும்!
கயல்மீனும் கண்விழித்துக்
-காதலியை எழுப்பும்!
அஞ்சுகமும் தன்குரலில்
-கொஞ்சுமொழி பேசும்!
மஞ்ஞைகளும் மரகதமாம்
-மரக்கிளையில் துயிலும்!
கலைமானின் மருள்விழிகள்
-காவியங்கள் கூறும்!
தலைமீது கவர்க்கொம்பு
-தற்காப்புச் செய்யும்!
மலர்மீது வண்டினமும்
-மாயவலை வீசும்!
குலமகளாம் அவள்மீது
-வீழ்ந்து இசைபாடும்!
தவளையும் தம்குரலில்
-தம்பூரா மீட்கும்!
குவளையும் இதழ்விரித்து
-குவலயத்தை ஈர்க்கும்!
மலையோரம் மா நதியும்
-மகிழ்வாய் நடமாடும்!
அலைபாயும் ஆழ்கடலும்
-அருமுத்துக் குளிக்கும்!
எழிலான இயற்கையவள்
எழில்நடனம் புரிவாள்!
ஏழ்பிறப்பும் காணவொணா
-எழிலதனைத் தருவாள்!
நன்றி
மதிமகன்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...