மாறியதே வாழ்வு…

வசந்தா ஜெகதீசன் மாறியதே வாழ்வு... தினம் தினமாய் திசைமாறும் திருப்பங்கள் பலவாகும் ஆறெனும் நதியோட்டம் அனுதினமும் பெருமன்றம் கூறுபடும் குழப்பங்கள் குறுகி வரும்...

Continue reading

உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை

செல்வி நித்தியானந்தன் (771) உருண்டோடிய பந்து வாகைசூடிய மகிமை கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தும் கோலாகலமாக...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 166
15/03/2022 செவ்வாய்
ஏழ்பிறப்பும் காணா எழில்!
——————————–
வயலோரம் குயிலொன்று
-துயிலெழுந்து கூவும்!
கயல்மீனும் கண்விழித்துக்
-காதலியை எழுப்பும்!

அஞ்சுகமும் தன்குரலில்
-கொஞ்சுமொழி பேசும்!
மஞ்ஞைகளும் மரகதமாம்
-மரக்கிளையில் துயிலும்!

கலைமானின் மருள்விழிகள்
-காவியங்கள் கூறும்!
தலைமீது கவர்க்கொம்பு
-தற்காப்புச் செய்யும்!

மலர்மீது வண்டினமும்
-மாயவலை வீசும்!
குலமகளாம் அவள்மீது
-வீழ்ந்து இசைபாடும்!

தவளையும் தம்குரலில்
-தம்பூரா மீட்கும்!
குவளையும் இதழ்விரித்து
-குவலயத்தை ஈர்க்கும்!

மலையோரம் மா நதியும்
-மகிழ்வாய் நடமாடும்!
அலைபாயும் ஆழ்கடலும்
-அருமுத்துக் குளிக்கும்!

எழிலான இயற்கையவள்
எழில்நடனம் புரிவாள்!
ஏழ்பிறப்பும் காணவொணா
-எழிலதனைத் தருவாள்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan