” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனநல தினம்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.10.24
ஆக்கம் 334
மனநல தினம்

பத்தாம் திகதி பத்தாம்
மாதம் மனநல தினமே
பாரினில் இன நலமோ
விடையின்றி வினா
ஆனதே

நொந்து நோயாகாது
வாழ நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
ஆனதே

குடல் காய்ந்து உடல்
மெலிந்து பசியில் மன
நலம் குன்றிய மரணம்
கனமானதே

இல்லாதவனுக்கு இருப்பவன் பகிர்வதும்
கல்லாதவனுக்கு கல்வி,
நற்பழக்கம் கற்றுக்
கொடுப்பதும் ஏலாதவனுக்கு உதவுவதும் தானமானதே

தாமாகச் சிந்திக்கும்
திறமை அதிகரிக்க
மன உளைச்சல் மறைய
அருமருந்தானதே .

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan