மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

மனமா அறிவா அறிவாய் மனமே?!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 2129

மனமா அறிவா?
அறிவாய் மனமே!!

அதிகமாய்க் காயம் பட்டும்
அதற்கே புரிவதில்லை
இதுதான் விதியோ என்றால்
இதற்கு விளக்கம் இல்லை
இறப்பு மலிந்த மண்ணில்
இதயத்திக்கு மதிப்பு இல்லை
மனமோ அறிவோ என்றால்
மயக்கம் அதிலும் உண்டாம்..

எத்தனை விளக்கம் இங்கே
விளக்கியும் பயனோ இல்லை
மனதுக்கு புரிந்த போதும்
அறிவோ ஏற்பதும் இல்லை
அறிவால் அறிந்த போதும்
மனது சமாதானம் ஆவது இல்லை..

அறிவால் செயல் ஆற்றின்
மயக்கம் இங்கே இல்லை
அகத்தால் பார்க்கும் போது
அறிவுக்கோ வேலை இல்லை
எத்தனை சொல்லியும் கேளா
மனதினுக்கு துயரே மிச்சம்
இதுவும் கடந்தே போகும்
இனி அதுவே மருந்தும் ஆகும்..
சிவதர்சனி இராகவன்
27/3/2025

Nada Mohan
Author: Nada Mohan

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading