சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மனமே மனதை அடக்கட்டும்

கெங்கா ஸ்ரான்லி

நடுக்கடலில் படகு ஆடும்போது
ந்ந்திக்கடவுள் வந்து காக்க வேண்டி
குந்தியிருந்து கும்பிட்டால் போதுமா
மனம் எனும் தோணி அங்கும்
மயங்கி நிற்கையில் ஊசலாடும்
எண்ணக் கோர்வை எதிர்த்தாட
வண்ணம். செய்யலாம் மாயை
மனம் ஒரு குரங்காம்
பாடினான் கவிஞன் அன்று
ஒருநிலைப் படுத்த யோகாவாம் தியானமாம்
நிற்குமா நிலையாக கேள்விக் குறியே
என்ன செய்தாலும் மனித மனம்
அலைபாயுமே தவிர ஒருநாளும்
அடங்கி விடாது கண்கூடு
ஞானிகளும் மனம் தடுமாறியதுண்டு
மனத்தை அடக்க மனத்தால்
தான் முடியுமே தவிர
வேறு ஒன்றாலும் முடியாது
எனவே மனமே மனத்தை அடக்கட்டும்!

Nada Mohan
Author: Nada Mohan