” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனமே மனதை அடக்கட்டும்

கெங்கா ஸ்ரான்லி

நடுக்கடலில் படகு ஆடும்போது
ந்ந்திக்கடவுள் வந்து காக்க வேண்டி
குந்தியிருந்து கும்பிட்டால் போதுமா
மனம் எனும் தோணி அங்கும்
மயங்கி நிற்கையில் ஊசலாடும்
எண்ணக் கோர்வை எதிர்த்தாட
வண்ணம். செய்யலாம் மாயை
மனம் ஒரு குரங்காம்
பாடினான் கவிஞன் அன்று
ஒருநிலைப் படுத்த யோகாவாம் தியானமாம்
நிற்குமா நிலையாக கேள்விக் குறியே
என்ன செய்தாலும் மனித மனம்
அலைபாயுமே தவிர ஒருநாளும்
அடங்கி விடாது கண்கூடு
ஞானிகளும் மனம் தடுமாறியதுண்டு
மனத்தை அடக்க மனத்தால்
தான் முடியுமே தவிர
வேறு ஒன்றாலும் முடியாது
எனவே மனமே மனத்தை அடக்கட்டும்!

Nada Mohan
Author: Nada Mohan