மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத் தலைப்பு
கொட்டிடும் முரண் கொட்டுமே கொடுக்காய்
விட்டிட முடியாப் பகையையே
தொடுவர் இவர் நாவல் நாளும்
ஆதலால்
கனியது இருக்கக் காயது பற்றிடாதே நீயும்
தேனினிய சுவையே தேவையே பேச்சிலும்
காணுநீ அதையே கவனித்தே கொட்டியே

நன்றியை நறுக்குவதும் நாராசப் பேச்சே
இன்றோடு விட்டுவிடு இதயச் சுருக்கை
வென்றோடி இங்கிதத்தை எங்கும் இறைக்கட்டும்
அங்கதம் கலவா அமுதப் பேச்சு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading