இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாவீரரே

பானுக்கும் பருப்புக்குமே
படையெடுத்தோம் நாம்
கூனிக்குறுகலுக்கு விடைகொடுக்கக் களம்புகுந்தவர் நீவிர்
அதனால் மனம்புகுந்தீர்
மாவீரராய்ச் சிறந்தீர்

பகடுகளை அறுத்தீர்
பருவக்கனவைச் சிதைத்தீர்
உறவுகளை வெறுத்தீர்
உரிமையையே நினைத்தீர்
புறத்தை மறந்தீர்
புடைத்தெழு தோளில்
ஆயுதங்கள் சுமந்தீர்

அச்சத்தைத் துறந்தே
களத்தில் சுழன்றீர்
எஞ்சியவரும் விழித்தெழ
எத்தனங்கள் முளைத்திட
எச்சமமென ஏந்திட
உயிர்கழற்றி விழ்ந்தீர்

எழுகின்ற சுடர்கள்
ஏந்துதே உம்நினைவை
அழுகின்ற கண்ணீரும்
அறைகின்றதே துயரை
தழுவுகின்ற கரங்கள்
வேண்டுதே இறையை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading