நினைவுகள் கனக்கின்றன 78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 27-11-2025 ஊமையாய் உறங்கிய உள்ளத்து அலையெல்லாம் கார்த்திகை பிறந்தாலே கனக்கின்றது நினைவாலே இறுதி மூச்சின் சத்தம்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

மாவீரரே

பானுக்கும் பருப்புக்குமே
படையெடுத்தோம் நாம்
கூனிக்குறுகலுக்கு விடைகொடுக்கக் களம்புகுந்தவர் நீவிர்
அதனால் மனம்புகுந்தீர்
மாவீரராய்ச் சிறந்தீர்

பகடுகளை அறுத்தீர்
பருவக்கனவைச் சிதைத்தீர்
உறவுகளை வெறுத்தீர்
உரிமையையே நினைத்தீர்
புறத்தை மறந்தீர்
புடைத்தெழு தோளில்
ஆயுதங்கள் சுமந்தீர்

அச்சத்தைத் துறந்தே
களத்தில் சுழன்றீர்
எஞ்சியவரும் விழித்தெழ
எத்தனங்கள் முளைத்திட
எச்சமமென ஏந்திட
உயிர்கழற்றி விழ்ந்தீர்

எழுகின்ற சுடர்கள்
ஏந்துதே உம்நினைவை
அழுகின்ற கண்ணீரும்
அறைகின்றதே துயரை
தழுவுகின்ற கரங்கள்
வேண்டுதே இறையை

மனோகரி ஜெகதீஸ்வரன்.

Nada Mohan
Author: Nada Mohan

    தியாகம் செல்வி நித்தியானந்தன் தமக்கென வாழாது பிறருக்காய் உயிரை மண்ணுக்கு அர்ப்பணித்த வீரரின் பெருந்தியாகம் தலைவனின் பேச்சு தாரக மந்திரம் தரணியில்...

    Continue reading