மனோகரி ஜெகதீஸ்வரன்

கலவரம்

ஆணவக் கேடு அறிவுத் தீட்டு
ஆகாக் கூட்டு அண்டி அடக்கின்
அங்கு தோன்றும் கலவரம்

அருளைச் சிந்தா அக்கிரம நிலவரம்
இருளைப் பூட்டி
இயக்க மழிபின்
கருக்கொண்டு கருவ
றுக்கும் கலவரம்
மருக்கண்டு மருண்டோடி
மறைந்தோடும் சுகவரம்

தீண்டும் துயரை தடுக்க
தாண்டு வகையறி யாநிலை
நீண்டு செல்லின் நிமிடமும்
மனது காணும் கலவரம்

பிறந்த காதல்
பிறழ்வு காணில்
பிறக்குமங்கு கலவரம்
குளறு மனமும் குழம்பியே உலாவரும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading