” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நடிப்பு

நிகரில்லா நிகழ்கலையே நடிப்பு
நிகழ்த்துவோமே நாமுமதைப் பிடித்து
அகத்தினிலே காட்டுமது கூத்து
அசத்தியேநம் அனைவரையும் ஏய்த்து
புகழையுமே பூட்டுமது புகுந்து
பூணுவேடம் கலைக்காயே சூடின்
இகழ்வுதனை இரட்டிப்பாய் கூட்டும்
இக்கட்டைப் பிறருக்கு காட்டின்

அம்பலத்தே காட்டுகின்ற நடிப்பு
அருட்டிடுமே நவரசங்கள் தூவி
கும்பிட்டே காண்பவரும் நயப்பர்
குதித்துமோதிக் குதூகலமாய்க் கூவி
நம்பியவர் கக்குகின்ற நடிப்பு
இருட்டாக்கும் அறிவுதனைச் சீவி
தெம்பிழந்து வீழ்ந்திடுவார் சுருண்டு
நம்பியவரும் துயர்தனையே காவி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan