” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பத்தலைப்பு
(நன்றிப்படையல்)

காவிகள் கரங்கள் கோர்த்த
மாவிலைத் தோரணங்கள் ஆரமிட
கூவித்தாவி மனமும் கூத்திட

அள்ளிவைத்த புள்ளிகள் கோலமிட
துள்ளிப்பறந்து வெடிகள் சத்தமிட

பாலும் சக்கரைப்பாகும் சேரப்
பொங்கியது பொங்கல்
நாலும் சேர்த்தே ஆதவனுக்கு
நன்றியுடன் படைத்தோம் படையல்

ஆதவக் கரங்கள் தீண்டி
அதனை உண்டது விரும்பி
சாதனை மனிதராம் உழவர்க்கும்
சாத்தினோம் நன்றிப் போர்வை – எம்
சாதகச் செயல் கண்டு
சவுக்கடி பட்டு மிரண்டு
பாதகமும் போனது திரும்பி

கருணைக் கோர்வையே உழவர்
உடலது சிந்தும் வியர்வை
திருவைத் தீர்வைக் கொடுத்துக்
காப்போம் அவரது வாழ்வை

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan