19
Mar
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
19
Mar
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வேண்டாத போரும் தீண்டாத பழியும்
வளைகுடா யுத்தம் வாட்டுது மக்களை
தலையெடுத்து வாழத் தடையாக...
மனோகரி ஜெகதீஸ்வரன்
காணி
அசையாச் சொத்து
அருமை கண்டு
அகலம் நீளம்
அகன்ற நிலத்தை
இசைந்து தந்தாள்
எனக்கு உரித்தாய்
இறக்கும் முன்னே
ஈன்றவள் விருப்பாய்
அங்கே காவலை நிகழ்த்தும்
அருகருகே நிமிர்ந்த தடிகள்
குடைவிரித்து நிழல் கொடுக்கும் மரங்கள்
குவித்தே கொடுக்கும் வளங்கள்
இடைமறிக்க
இதழை விரிக்கும் மலர்கள்
இனிய தேனை சுரக்கும்
படையோடு நிற்கும் பக்கத்தே சிட்டு
பற்றின் பறந்தோடும் இடம்விட்டு
திருட்டை நிகழ்த்த
திரளும் அணில்கள்
திகட்டா விருந்தளிக்கும் பழங்கள்
பறித்தாரே காணியை
பயத்தை ஏவி
பகையை மனதில்
பலநாள் காவி
முறியடிக்கத் திறனற்று
மூண்ட சினத்தை
மனதுள் அடக்கி
வாழுகின்றேன் கூனி
மனோகரி ஜெகதீஸ்வரன்
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...