மனோகரி ஜெகதீஸ்வரன்

காணி

அசையாச் சொத்து
அருமை கண்டு
அகலம் நீளம்
அகன்ற நிலத்தை
இசைந்து தந்தாள்
எனக்கு உரித்தாய்
இறக்கும் முன்னே
ஈன்றவள் விருப்பாய்

அங்கே காவலை நிகழ்த்தும்
அருகருகே நிமிர்ந்த தடிகள்

குடைவிரித்து நிழல் கொடுக்கும் மரங்கள்
குவித்தே கொடுக்கும் வளங்கள்
இடைமறிக்க
இதழை விரிக்கும் மலர்கள்
இனிய தேனை சுரக்கும்
படையோடு நிற்கும் பக்கத்தே சிட்டு
பற்றின் பறந்தோடும் இடம்விட்டு

திருட்டை நிகழ்த்த
திரளும் அணில்கள்
திகட்டா விருந்தளிக்கும் பழங்கள்

பறித்தாரே காணியை
பயத்தை ஏவி
பகையை மனதில்
பலநாள் காவி
முறியடிக்கத் திறனற்று
மூண்ட சினத்தை
மனதுள் அடக்கி
வாழுகின்றேன் கூனி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading