மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

பெற்றோரே

தாய்மைப் பூப்பாலே
தம்மை நிறைந்தவர்
தாங்கிய வேடத்தால்
தரணியில் நிலைப்பவர்
சேயது முளைத்திட
சேர்ந்தே விதைப்பவர்
செய்தி தரும்பழியை
செய்கையாலே உடைப்பவர்

ஆளுமை மகவை
ஆக்க உழைப்பவர்
அந்தரங்க சுகங்களை
அதற்காய் துறப்பவர்
தாழாத் தலைகளையும்
தாமாய் தாழ்த்துவர்
தடை இடித்து
தம்கடன் முடிக்க

முகவழிச் சான்று முகத்திலே உண்டு
முகவரி காட்டுமது
முகத்திலே நின்று
அகவலி போக்கிட
அனைத்தையும் செய்திடு
அன்னை தந்தைக்கு
அருமை மகவாய்

நாட்களை எமக்காய்
நகர்த்திய பெற்றோர்
நடுத்தெரு நின்று
நாணலாமோ சொல்லு

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading