மலர்ந்துவா! தைமகளே!

நகுலா சிவநாதன்1744

மலர்ந்துவா! தைமகளே!

புலர்கின்ற புத்தொளியே புனிதம் காக்க
மலர்கின்ற புத்தாண்டே மகிழ்வைத் தருக!
பிறக்கின்ற தைமகளும் புதுமை தரவே
நிறைக்கின்ற நல்மாதம் நித்திலத்தில் பொலிக!

தைமகளே வருக! வருக!
தரணியெங்கும் தமிழ் மணக்க வருக!
தாய்மண் பெருமை நிறைத்து வருக!
தண்மதியாய் ஒளிபரப்பி நிறைக!

மண்மலரே மணந்து வருக! வருக!
மாண்புகளை அள்ளி தருக! தருக!
கண்மலர்ந்து கனிகொடுக்கும் மரங்கள் நிறைக!
காசினியில் அன்பு மலர்க! ஆசை குறைக!
இன்பம் பெருக! இல்லம் செழிக்க!
மலர்ந்து வா தைமகளே!
புலர்ந்து பொலிக! பூமகளே! https://youtu.be/AONmg2srkgs?si=G3fEaem66rKDhT32

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading