அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

மலையின் விந்தை

நகுலா சிவநாதன்

மலையின் விந்தை

மலையின் விந்தை கண்டு கண்டு
மாட்சி யெனக்குள் உதிக்கிறதே!
நிலையில் ஊற்றாய் நிதமும் அருவி
நிற்கும் பெருமை அறிவீரோ
கலையில் இறைவன் படிமம் உருவாய்
கடைந்து எடுக்கும் மலையின்கல்
சிலையை வடிக்கும் சிப்பி காணும்
சிறப்புக் கல்லும் மலையிலன்றோ!!

அருவி பாயும் அழகு தோற்றம்
அகத்தை மயக்கி யிழுத்திடுமே!
உருகி வீழும் வெள்ளப் பெருகி
ஓடி மனத்தில் பாய்கிறது!
துருவித் எழுமே சிந்தை கண்டு
துாணாய் நிற்கும் மலையையெண்ணிக்
கருவி யாகக் கல்லைக் கண்ட
காலம் அன்றோ கற்காலம்!

நகுலா சிவநாதன் 1767

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading