மலையின் விந்தை

நகுலா சிவநாதன்

மலையின் விந்தை

மலையின் விந்தை கண்டு கண்டு
மாட்சி யெனக்குள் உதிக்கிறதே!
நிலையில் ஊற்றாய் நிதமும் அருவி
நிற்கும் பெருமை அறிவீரோ
கலையில் இறைவன் படிமம் உருவாய்
கடைந்து எடுக்கும் மலையின்கல்
சிலையை வடிக்கும் சிப்பி காணும்
சிறப்புக் கல்லும் மலையிலன்றோ!!

அருவி பாயும் அழகு தோற்றம்
அகத்தை மயக்கி யிழுத்திடுமே!
உருகி வீழும் வெள்ளப் பெருகி
ஓடி மனத்தில் பாய்கிறது!
துருவித் எழுமே சிந்தை கண்டு
துாணாய் நிற்கும் மலையையெண்ணிக்
கருவி யாகக் கல்லைக் கண்ட
காலம் அன்றோ கற்காலம்!

நகுலா சிவநாதன் 1767

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading