” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“மாதவமே உந்தனை”

Jeya Nadesan

கவிதை நேரம்-28.11.2024
கவி இலக்கம்-1956
“மாதவமே உந்தனை”
——————-
இயற்கையிலே உறைந்திட்ட
எம் இதயத் தெய்வங்களே
எம் இனத்தின் உரிமைகளுக்காக
தமையீர்ந்த வீரப் புதல்களே
உயிரோடு உலோடு போராடி
இன்பம் ஆசை காதல் பாசம் உறவுகள்
தூக்கி எறிந்து விட்டு துறந்தவர்களே
காடு கடல் தாண்டி சுமையுடனே
ஆயுதங்களை தோழில் சுமந்து
சயனைட் குப்பி கழுத்தில் கட்டி
இடுக்கண் ஆயிரம் அடுக்காய் வரினும்
துணிவோடு போராடி உயிர் நீத்தார்களே
உங்கள் வரலாறு காடும் காந்தளும்
நீண்ட காவியங்கள் படைக்கும்
கல்லறைகள் பெயர் பதிக்கும்
வரலாறு படைத்து மறைந்த மகாத்மாக்களே
மாதவமே உங்கள் கனவுகள் நனவாகும்

Nada Mohan
Author: Nada Mohan