சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மாதவமே உந்தனை

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவிதை நேரத்துக்காக..!!

கவி இலக்கம்-2064
மாதவமே உந்தனை..
மண்தாய் மடிசுமந்தாள்
மனிதம் உன்னுள் குடி புக
மரணம் கூட மண்டியிட்டதோ
மானிடன் அல்ல நீ மா மனிதன்..

அடிமை விலங்கொடிக்க
அன்னை மண் விடுதலைக்காக
அளப்பரிய பணியியற்றிய நீயே
மாதவ மாணிக்கமாய் என் முன்..

பிறப்பதும் ஒருமுறை
இறப்பதும் ஒரு முறை
அதுவே தாய் தேசத்துக்காய்
எண்ணமே எத்தனை சிறப்பாம்..

உனை ஈன்ற தாயும் உச்சரிப்பாள்
உனைத் தாங்கிய மண்ணும்
படை நடாத்திய வீரத்தளபதிகளும்
தானைத் தலைவனும் சொல்லுவான்..

மாதவமே உந்தனை மண் கண்டது
மரணம் உன் முன் மண்டியிட்டது
இலட்சிய நெறி தலைவணங்கியது
இன்னும் உனையே வான் முட்டுது..
சிவதர்சனி இராகவன்
28/11/2024

Nada Mohan
Author: Nada Mohan