நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

மாதவமே உந்தனை

சிவருபன் சர்வேஸ்வரி

மாதவமே உந்தனை

மானிலம் செழித்தது மலர்க்கொடிகள் படர்ந்தது //
தேனினமாய் வாழ்வுகள் அதுவே பொற்காலம் //

மூளும் நிலையும் மூண்டது அது பெரும் நெருப்பும் //
வாழும் பயிர்கள் வகைவகையாய் எங்கே கேள்விக்குறிதானே //
மீளும் கட்டம் இல்லை மீட்டிடத் துணையுமில்லை //

தரமும் தீரமும் செறிந்துமே தெறிக்க //
தாரையும் வார்த்த மாதவமே உந்தனை //

சிந்தையில் ஏற்றியே தொழுதிடும் முறையே //
மனமது கனக்கும் வலியது துடிக்கும் //

நினைந்தது எங்கே கேள்வியும் கணைதொடுக்கும்//
ஞாபகங்கள் நிழலாட ஞாலத்தில் ஒளியாட //
தீபங்கள் மிளிர்ந்ததுவே
தியாகங்கள் நெருப்பாக //
தாபங்கள் ஊறியதும் தணியாது ஆடியதும் //
தூபங்கள் போட்டென்ன கல்வெட்டில் பொறித்ததுவே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan