மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

“மாற்றத்தின் ஒளியினிலே”

நேவிஸ் பிலிப் கவிஇல(450)

புதுஉலகே புத்துயிரே புதிதாய் வா
புவியினை சலவை செய்திட விரைந்து வா
வாசமிகு மலராய் அன்பைப் பரப்ப வா
வளமான வாழ்வை வழங்க எமக்கருள வா

நற் பண்பால் வாழ்வுக்கு உயிரூட்டி
நல் எண்ணத்தை உள்ளத்தில் பயிராக்கி
நல்லது நினைத்து நம்பிக்கை வளர்க்க
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு

தீயினில் சுடர் விடும் பொன்னாக
செதுக்கிட உயிர் பெறும் கற்சிலையாக
வெற்றிகள் முழு மதியாய் ஒளிர
தோல்விகள் தேய் பிறையாய் மறைய

உலகினில் வாழும் உயிரினம்
உன்னத அன்பினில் ஓங்கிட
நிம்மதி எங்கும் நிலவிட
வாழும் வாழ்வு எமதாக

வாழ்க்கையின் மகத்துவம்
உணர்த்திட மாற்றத்தின் ஒளியாய்
விரைந்து வா
நன்றி

Author:

பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

Continue reading