அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

“மாற்றத்தின் ஒளியினிலே”

நேவிஸ் பிலிப் கவிஇல(450)

புதுஉலகே புத்துயிரே புதிதாய் வா
புவியினை சலவை செய்திட விரைந்து வா
வாசமிகு மலராய் அன்பைப் பரப்ப வா
வளமான வாழ்வை வழங்க எமக்கருள வா

நற் பண்பால் வாழ்வுக்கு உயிரூட்டி
நல் எண்ணத்தை உள்ளத்தில் பயிராக்கி
நல்லது நினைத்து நம்பிக்கை வளர்க்க
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு

தீயினில் சுடர் விடும் பொன்னாக
செதுக்கிட உயிர் பெறும் கற்சிலையாக
வெற்றிகள் முழு மதியாய் ஒளிர
தோல்விகள் தேய் பிறையாய் மறைய

உலகினில் வாழும் உயிரினம்
உன்னத அன்பினில் ஓங்கிட
நிம்மதி எங்கும் நிலவிட
வாழும் வாழ்வு எமதாக

வாழ்க்கையின் மகத்துவம்
உணர்த்திட மாற்றத்தின் ஒளியாய்
விரைந்து வா
நன்றி

Author:

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading