” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

“மாற்றத்தின் ஒளியினிலே”

நேவிஸ் பிலிப் கவிஇல(450)

புதுஉலகே புத்துயிரே புதிதாய் வா
புவியினை சலவை செய்திட விரைந்து வா
வாசமிகு மலராய் அன்பைப் பரப்ப வா
வளமான வாழ்வை வழங்க எமக்கருள வா

நற் பண்பால் வாழ்வுக்கு உயிரூட்டி
நல் எண்ணத்தை உள்ளத்தில் பயிராக்கி
நல்லது நினைத்து நம்பிக்கை வளர்க்க
முயற்சிகள் அனைத்தையும் முளைக்க விடு

தீயினில் சுடர் விடும் பொன்னாக
செதுக்கிட உயிர் பெறும் கற்சிலையாக
வெற்றிகள் முழு மதியாய் ஒளிர
தோல்விகள் தேய் பிறையாய் மறைய

உலகினில் வாழும் உயிரினம்
உன்னத அன்பினில் ஓங்கிட
நிம்மதி எங்கும் நிலவிட
வாழும் வாழ்வு எமதாக

வாழ்க்கையின் மகத்துவம்
உணர்த்திட மாற்றத்தின் ஒளியாய்
விரைந்து வா
நன்றி

Author: