நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

முடிவா விடிவா

செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா

அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும் நேரம்
போரும் பதட்டமும்
வந்தாலே சோகம்
சண்டையும் பேச்சும்
கண்துடைப்பு திட்டம்

ஆண்டுகள் கடந்தும்
பேச்சுத் தொடராம்
அழியாத சுவட்டின்
அவலத்தின் தாகம்
அகப்பட்ட உயிரின்
கண்ணீரின் தேடல்
முடிவும் இல்லாமல்
விடிவும் ஓட்டம்

ஆட்சியிலே மாற்றம்
கற்றிடும் பாடம்
அணிவகுத்து பலதும்
ஆளுமையின் ஏற்றம்
தோயுடன் வாழ்வும்
சீரழியும் நிலையும்
பசிதனை போக்கி
பாரினை நிறைத்திடு

செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan