முன்னூறின் தொடுகையிலே…

வசந்தா ஜெகதீசன்

முன்னூறின் தொடுகையிலே..
முன்னூறாய் முழுமதியாய் முகிழ்ந்திருக்கும் தருணம்
சந்தமுடன் சிந்தும் தான் சரிசமனாய் உராயும்
கவித்தோப்பின் அறுவடையில்
கனிந்ததொரு விளைச்சல்
காத்திடமாய் அரணமைத்து வளர்த்த பயிர் உழவர்
ப.வை அண்ணா தொகுப்பே பாவலர்க்கு அமிர்தம்
பல கவிஞர் பகிரும் கவி வனப்பில்
பக்கதுணை கவிஞர்களின் நெறியாள்கை மிடுக்கில்
ஓயாது ஒங்கிடுமே எழுதுகோலின் ஏணி
வயல்நிலமாய் பாமுகமே தளமாகி தாங்கும்
வாரமது செவ்வாயில் வான் தொட்டே உயரும்
சந்தம் சிந்தும் கவியாளர் பலராகி நாமும்
பாவலராய் சூட்டுகிறோம் பாமாலை வாழ்த்து!
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan