நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

முயற்சியே பலம் முனைப்பே திடம்

ராணி சம்பந்தர்

புது வாழ்வை நோக்கிப்
புறப்படும் புயல்களிலே
திட தன்னம்பிக்கையே
தடமான தும்பிக்கைப்
பயிற்சியதுவே முயற்சி

மனிதனை ஆக்கியது
சிறக்க அடம் பிடியாது
வேடம் காட்டாமலும்
வெந்து போனதும்
நொந்து ஆனதுமே
மறந்து அயரா உழைப்பு

இது தான் வேண்டும்
அதுதான் அதுதான்
என்றிலாது கிடைப்பது
அணைத்து முன்னேற
பிழைப்பின் உயர்ச்சி

இலட்சிய முனைப்பாடிட
அலட்சிய முறைப்பாடு
அணைந்து வல்லமை
பிணைத்து நாளும்
பொழுதும் விடாத
முயற்சியே பலம்
முனைப்பே திடம் .

Nada Mohan
Author: Nada Mohan