நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“

நேவிஸ் பிலிப் கவி இல( 611)

பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
முனைப்போடு நாம் முயன்றால்
தோல்வி என்பதே நமக்ககில்லை

திட்டமிடா உழைப்பும்
முடியுமா என்ற நினைப்பும்
பாதையின் தடைக்கல்லாகும்
வீழ்ச்சி கண்டு முடங்கிடாமல்
திடமோடு செயல்பட்டால்
வானமே நம் வசமாகும்

முன்னேற்றப் பாதையிலே
விழிகள் விடியலைத் தேடட்டும்
வெற்றியின் வாசல் ஏறிச் செல்ல
முயற்சி நம் படிக் கல்லாகட்டும்

நம்பிக்கை என்பது நாளைய வெற்றியின் விதை
இன்றே அதனை விதைத்திடுவோம்
அயர்ச்சி இன்றி முயற்சியோடு செயலாற்றி
பாரினில் மேன்மை பெற்றிடுவோம்.
நன்றி………..

Nada Mohan
Author: Nada Mohan