முயற்சியே பலம் முனைப்பே திடம்

ராணி சம்பந்தர் புது வாழ்வை நோக்கிப் புறப்படும் புயல்களிலே திட தன்னம்பிக்கையே தடமான தும்பிக்கைப் பயிற்சியதுவே முயற்சி மனிதனை ஆக்கியது சிறக்க...

Continue reading

“ முயற்சியே பலம் முனைப்பே திடம்“

நேவிஸ் பிலிப் கவி இல( 611)

பாதங்கள் நடக்கத் துணிந்து விட்டால்
பாதைகள் மறுப்பு சொல்வதில்லை
முனைப்போடு நாம் முயன்றால்
தோல்வி என்பதே நமக்ககில்லை

திட்டமிடா உழைப்பும்
முடியுமா என்ற நினைப்பும்
பாதையின் தடைக்கல்லாகும்
வீழ்ச்சி கண்டு முடங்கிடாமல்
திடமோடு செயல்பட்டால்
வானமே நம் வசமாகும்

முன்னேற்றப் பாதையிலே
விழிகள் விடியலைத் தேடட்டும்
வெற்றியின் வாசல் ஏறிச் செல்ல
முயற்சி நம் படிக் கல்லாகட்டும்

நம்பிக்கை என்பது நாளைய வெற்றியின் விதை
இன்றே அதனை விதைத்திடுவோம்
அயர்ச்சி இன்றி முயற்சியோடு செயலாற்றி
பாரினில் மேன்மை பெற்றிடுவோம்.
நன்றி………..

Nada Mohan
Author: Nada Mohan