” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

முற்றத்து நிலவு

ராணி சம்பந்தர்

முற்றத்து நிலவில் நம் மூதாதையர்
கற்றுத் தந்த அறிவுரைக் கதைகள்
இற்றைவரையும் காதில் கேட்குதே

சுற்றும் விண்வானத்து வளவுக்குள்
பற்றிவரும் வான்மதிக்குள் பாட்டி
ஒருத்தி குந்தி இருந்து பாக்குரலில்
இடிப்பதாகச் சொல்லி கண்ணாடியில்
வாளித் தண்ணீருக்குள் பிடித்த நிலா

பற்றாத உயரத்தில் நின்றது காட்டிய
வெளிச்சத்தில் இடியப்பம் ,சொதியும்
குழைத்து ஊட்டி வளர்த்த மழலையும்
பொக்கை வாய் திறந்து சிரித்து மகிழ

வெற்றுச் சோற்றுப் பானை சுரண்டிய
அடிச்சோற்றில் மிஞ்சிய சட்டிக்கறியும்,
மரவெள்ளிக்கிழங்கும் பிசைந்து பிடி,
பிடி என முற்றத்து நிலவில் அமர்ந்து

தந்ததும் இறுதி உருண்டை கடைக்
குட்டிக்கு என எனக்கே தந்ததுமே
அரை வயிறு நிறைந்திருந்தும்
முழுதாய் நிறைந்ததே
அம்மாவின் அன்போடும் கூட்டாக
இருந்துண்டதும் முற்றத்து நிலவில்.

Author:

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading