முள்ளி வாய்க்கால் 23.5.23

சந்தம் சிந்தும்
வாரம் 223

முள்ளி வாய்க்கால்

ஐயோ குரல்
கேட்கவில்லையா?
அனர்த்தங்களின் ஓலம்
கேட்கவில்லை?
தொலைந்தவர்களை
காண வில்லையா?
தேடுபவர்கள்
கிடைக்கவில்லையா?
அழிந்தவற்றை
உருவாக்க வில்லையா?
மறைந்த சோகம்
நினைவில்லையா?
மாற்றங்கள்
இன்னும் வரவில்லையா?
ஆக்கங்கள்
உருவாக வில்லையா?
அதற்கான தேடல்கள்
தொடங்க வில்லையா?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading