அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

மூப்பு வந்தாலே

ஜெயம்
மூப்பு வந்தாலே இறப்பைப்பற்றி சிந்தனையோ
மூப்பு வந்தாலே பேச்சாலே நிந்தனையோ
முதுமை என்பது பயனில்லாத பருவமோ
முதுமை தீண்டியதால் வலுவிழந்த உருவமோ

மலர்ந்த இளமை வசந்தம் எங்கே
கலங்கியே நாட்கள் முதுமையில் இங்கே
வாழ்க்கை நூலின் இறுதி அத்தியாயம்
நூல் நிறைத்திடும் அனுபவத்தின் மொத்தம்

கைபிடித்து காலம் எதுவரை கூட்டிச்செல்லும் 
கைவிட்டு பயணத்தை எப்போது தள்ளும்
வயதின் இறுதி பக்கங்களும் புரள
பயத்துடன் பார்த்திடும் முதுமையும் மிரள 

மரமென நிழல் தரும் மூப்போரை
வரந்தரும் இறையென இங்கே பார்ப்பாரா
மூத்தோரை சுமையெனவே தாங்குவார்கள் பார்ப்போரும்
மூத்தோரில்லம் அவர்களது கண்ணீர்கதைகள் கூறும்

Author:

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading