ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மொழியும் கவியும்

ரஜனி அன்ரன்

“ மொழியும் கவியும் “ கவி…..ரஜனி அன்ரன் (B.A) 23.01.2024

மொழியும் கவியும் துருவங்கள்
மனதை மகிழ்வாக்கும் சிகரங்கள்
மொழியின்றிக் கவியில்லை
கவியின்றி மொழியில்லை
மொழியிலே நீந்துவது கவி
மொழியின் சாவியே கவி
மொழிக்குள் உவகையும் உணர்வும் சேர
உருவாகுமே உன்னத கவி !

மொழி பேசுது கவி பாடுது
விழி தேடுது ஒளி சேருது
மொழியும் கவியும் இணைந்தால் உலகம்
மொழியென்பது உயிரின் மூச்சு
மொழியென்பது உறவின் பாலம்
உள்ளத்தின் தீண்டல் மொழி
உலகை மாற்றும் உந்துசக்தி மொழி
இதயத்தை இணைப்பது கவி
உதயத்தின் அழகியல் கவி !

மெளனத்தின் மர்மத்தில் பிறந்தது மொழி
மனிதனின் உள்ளத்தில் முடி சூடியது கவி
சொற்களின் அடுக்கில் உருவானது கவி
கவியின் அழகால் உயிர்ப்பானது மொழி
கலையின் உச்சமே கவி
மொழியால் மொழிந்தால் வருவது கவி
பேசும் பாசையாம் மொழி
எழுதும் ஓசையாம் கவி
மொழியில் மூழ்கி கவிகள் புனைந்து
விழிகளால் உலகை ரசித்தேன் நானும்
மொழியும் கவியும் என்னிரு விழிகள் !

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading