சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மௌனத்துள் நிறை அஞ்சலி

இரா.விஜயகௌரி

சிலிர்த்துப்போகிறது. நெஞ்சம்
சிந்தித்தால் பதறித் துடிக்கும் நொடிகள்
விதைக்கப்பட்ட வீரத்தின் உதிரம்
விடியலொன்றே தேடிய கனவின் காலம்

ஆம் ஆத்மாக்களை அஞ்சலிக்கும் நேரம்
அவலங்களால் வரையப்பட்ட வாழ்வின் ரணம்
ஆராதிக்கப்பட வேண்டியவர்கள் அனாதைகளாக
வினாக்குறிகளுடன் விடை தேடும் மாந்தர்கள்

எதிர்பார்ப்புகளின்றிய மாவீர்ர் சுவடுகள்
மண்ணின் மீட்பை நோக்கிய பெரும்பயணம்
சாவைத்தரிசித்த மீள முடியாத கணங்கள்
தம் உறவுகளை விட்டுச் சென்றதெங்கே

ஆரவாரங்களின்றி அமைதியாய் அன்பாய்
உணர்ந்து உயிர்ப்பை எழுதும் விலகா நேசமாய்
மௌனமாய் கை கோர்த்தெழுவோம்
மரணத்திலும் விலகா மாவீர்ர் நினைவெழுதி

Nada Mohan
Author: Nada Mohan