மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

ரஜனி அன்ரன்

“ புழுதி வாரி எழும் மண்வாசம் ”…கவி..ரஜனி அன்ரன் (B.A) 16.02.2023

புழுதி வாசம் வீசுது புள்ள
பொழுதும் விடிஞ்சு போச்சு புள்ள
வயற்காடு போக வேணும்
வாடி புள்ள சேர்ந்து போவம் !

தூக்கம் கண்ணைத் தழுவுது மாமா
தூறல் கொஞ்சம் நிற்கட்டும்
துள்ளிக் குதித்து வாறேன் நானும்
தள்ளிக் கொஞ்சம் நில்லு மாமா !

செக்கலுக்க போனாப் புள்ள
சீக்கிரமாய் நாத்தும் நட்டு
பாத்திக்கும் தான் தண்ணி விட்டு
பகலுக்க வந்திடலாம் பரிசமும் போட்டிடலாம் !

முறுக்குமீசை கொண்ட மாமா
சுறுக்காக நானும் வாறன்
நறுக்கான கதைகள் பேசி
வயற்காடு போவம் மாமா !

வயற்காடு கலகலக்க
வாய்க்கால் தண்ணி சலசலக்க
சிட்டுக்கள் நாம் சிறகடித்து
சேர்ந்து போவம் வாடி புள்ளே !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading