ரஜனி அன்ரன்

“ பன்னாட்டு இனவழிப்புநாள் தை27 “கவி……ரஜனி அன்ரன்(B.A) 27.01.2022

தைத்திங்கள் இருபத்தி ஏழினை
பன்னாட்டு இனவழிப்புத் தினமாக
பல்லுலகும் அறியும் வண்ணம்
பிரகடனமாக்கியதே ஐ.நா.மன்றும்
உலக வரலாற்று ஏடுகளின்
கறைபடிந்த அத்தியாயமாக
கண்ணீரின் காவியமாக
இனஅழிப்புக்கள் அரங்கேறியதே !

ஐரோப்பா தொட்டு அமெரிக்கா வரை சென்று
அவுஸ்ரேலியா கனடாவிலும் பரந்து
எங்கள் தேசமும் இதற்கு விதிவிலக்கல்லவே
இனத்தின் பேராலும் நிறத்தின் பேராலும்
உலகையும் உலுக்கியதே இனவழிப்புக்கள் !

கனடாவில் பூர்வீகக்குடிகளும்
அமெரிக்காவில் செவ்விந்தியர்களும்
அவுஸ்ரேலியாவில் பழங்குடியினரும்
மெக்சிக்கோவில் மாயன் இனத்தவரும்
ஜேர்மனியில் யூதர்களும் திட்டமிட்டே அழிக்கப்பட்டனரே
எம் தேசத்தின் நேச உறவுகளின் இனவழிப்பும்
குருதியால் எழுதப்பட்ட வரலாற்றுக் காவியங்களே
சர்வதேசம் மெளனித்திருக்க சர்வநாசமும் அரங்கேறியதே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading