பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உன்னதமே….உன்னதமாய் “……கவி….ரஜனி அன்ரன் (B.A) 10.03.2022

இயல்பில் பண்பில் மேன்மையானது உன்னதம்
உயிருக்குள் உயிரைச் சுமப்பதும் உன்னதம்
உன்னதமே இங்கு உன்னதராய்
உன்னத பெண்கள் எழிற்சியாய்
உலகே விழிக்கும் உன்னத தினமாய்
பங்குனி எட்டினைப் பறைசாற்றுதே !

பெண்ணின்றிப் பிரபஞ்சமில்லை
பெண்ணின்றிப் பேறொன்றுமில்லை
பெண்ணிருக்கும் இடமோ இனிய நந்தவனம்
பெண்ணில்லா ஊரோ கொடிய காண்டாவனம்
பெண்ணவளின் பெருமைதனை
கண்குளிரக் காணலாமே வியந்து !

பன்முக வித்தகியாய் படைப்பின் சக்தியாய்
தன்னிகரில்லாத் தாரகையாய் தன்னம்பிக்கை வேராய்
பொறுமைக்கு பெருமை சேர்ப்பாள் உன்னதப்பெண்
அலுவலகம் தொட்டு ஆட்சி வரை
விளையாட்டுத் தொட்டு விண்வெளி வரை
அத்தனை துறைகளிலும் ஆழுமை பெற்று
ஆணுக்கு நிகராக அனுதினமும் உழைக்கும்
உன்னதரின் உன்னதத்தை போற்றிடுவோம் எந்நாளும் !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading