ரஜனி அன்ரன்

“ உழைப்பின் உன்னதர்கள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.05.2022

உலகையே தோள்களில் சுமந்து
உழைப்பினை உரமாக்கி
உண்ண உடுக்க உறங்க
உன்னதமாய் நாம் வாழ
ஆலைகளில் தொழிற்சாலைகளில்
வீதிச்சாலைகளில் சாக்கடைகளில் ஆழக்கடலில்
சேற்று வயல்களில் சுரங்கங்களிலென
உழைக்கும் உழைப்பாளிகள் என்றும் உன்னதர்களே !

உழைக்கும் உன்னதர்களை
மேன்மைப்படுத்தும் மே மாதமே
மேதினியில் பூத்து மேன்மை பெறுகிறாய் நீயும்
இரும்பாக தமை வருத்தி
கரும்பாக நாம்வாழ
உரமோடு உழைக்கும் உழைப்பாளிகளே
உலகினைத் தாங்கும் உன்னதர்கள் !

உழைப்பாளிகளின் கடின உழைப்பில்
உருவானதே இவ்வுலக அதிசயங்கள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உன்னத உழைப்பாளிகளின் உழைப்பு அவசியமே
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்
கடின உழைப்பினால் உலகை ஆழட்டும் !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading