14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
ரஜனி அன்ரன்
“ உழைப்பின் உன்னதர்கள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.05.2022
உலகையே தோள்களில் சுமந்து
உழைப்பினை உரமாக்கி
உண்ண உடுக்க உறங்க
உன்னதமாய் நாம் வாழ
ஆலைகளில் தொழிற்சாலைகளில்
வீதிச்சாலைகளில் சாக்கடைகளில் ஆழக்கடலில்
சேற்று வயல்களில் சுரங்கங்களிலென
உழைக்கும் உழைப்பாளிகள் என்றும் உன்னதர்களே !
உழைக்கும் உன்னதர்களை
மேன்மைப்படுத்தும் மே மாதமே
மேதினியில் பூத்து மேன்மை பெறுகிறாய் நீயும்
இரும்பாக தமை வருத்தி
கரும்பாக நாம்வாழ
உரமோடு உழைக்கும் உழைப்பாளிகளே
உலகினைத் தாங்கும் உன்னதர்கள் !
உழைப்பாளிகளின் கடின உழைப்பில்
உருவானதே இவ்வுலக அதிசயங்கள்
உலகம் இயங்க உயிர்கள் வாழ
உன்னத உழைப்பாளிகளின் உழைப்பு அவசியமே
வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்
கடின உழைப்பினால் உலகை ஆழட்டும் !
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...