பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ அகதி “……நாம் பெற்ற வரமா ?…கவி…ரஜனி அன்ரன் (B.A) 22.06.2023

யுத்தம் எனும் கொடிய அரக்கன்
மொத்தமாய் எமக்குத் தந்தபரிசு அகதி
சித்தம் கலங்கி நாதியின்றித் தவித்தபோது
தேசம் கடந்து கண்டங்கள் கடல்கள் தாண்டி
அயல்நாடு வெளிநாடென புலம்பெயர்ந்து
அடைக்கலம் தேடினர் உறவுகள்
அகதி எனும் முத்திரையும் நிரந்தரமாச்சு !

உயிரினைக் காக்க பொருளினை ஈட்ட
புதிய வாழ்வினைத் தொடர
கனவுகளைச் சுமந்தபடி
கற்பனையில் மிதந்தபடி
நம்பிக்கைச் சிறகினை விரித்து
நகர்ந்தனர் மேலை நாடுகளுக்கு அகதியாக
ஆண்டுகளும் நாற்பது கடந்து விட்டது இப்போ !

கால்த்தடம் பதித்து முனைப்போடு செயற்பட்டு
கடின உழைப்பினால் உயர்ந்து
நிரந்தர வதிவிட உரிமையும் பெற்று
தலைமுறைகள் மூன்றாகி தடம் பதித்து
தனித்துவமாய் வாழ்கின்றார் இன்று
உள்நாட்டில் அகதி வாழ்வு சாபக்கேடாகிட
வெளிநாட்டிலோ அகதி வாழ்வு சொர்க்கமாச்சு
மொத்தத்தில் புலத்தில் அகதிவாழ்வு தந்தது வரமே !

Nada Mohan
Author: Nada Mohan