ரஜனி அன்ரன்

“ வழிகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.10.2023

அன்னை தந்தையை அடுத்து
அறிவொளியை எமக்குக் காட்டி
அறியாமையை அடியோடு அகற்றி
திறமைகளைக் கண்டுணர்ந்து
வற்றாத கல்விச் செல்வத்தை வாரித்தந்து
விழி திறக்க வைத்து
வாழ்வில் ஒளியேற்றிய
வழிகாட்டிகள் எம் ஆசான்களே !

பள்ளியின் இருப்பிற்கும்
மாணவர் உயர்விற்கும்
தேச வளர்ச்சிக்கும்
தேர்வின் வெற்றிக்கும் அச்சாரமாகி
கற்றலின் வித்தைகளைக் கச்சிதமாக்கி
அற்புதமாய் அள்ளித் தந்து
கல்வி ஒளியூட்டிய வழிகாட்டிகள் ஆசான்களே !

கல்வியொடு ஒழுக்கத்தையும் பண்பினையும்
கண்ணியமாய் எமக்களித்து
வெற்றுத் தாளாய் இருந்த எமை
புள்ளிக்கோலம் போட வைத்து
அழகு பார்த்த ஆசான்களே – நீவிர்
பண்ணிய தியாகங்கள் எண்ணிலடங்கா
ஒளியூட்டிய வழிகாட்டிகளே நன்றி உமக்கு !

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading