இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

ரஜனி அன்ரன்

“ வழிகாட்டிகள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 12.10.2023

அன்னை தந்தையை அடுத்து
அறிவொளியை எமக்குக் காட்டி
அறியாமையை அடியோடு அகற்றி
திறமைகளைக் கண்டுணர்ந்து
வற்றாத கல்விச் செல்வத்தை வாரித்தந்து
விழி திறக்க வைத்து
வாழ்வில் ஒளியேற்றிய
வழிகாட்டிகள் எம் ஆசான்களே !

பள்ளியின் இருப்பிற்கும்
மாணவர் உயர்விற்கும்
தேச வளர்ச்சிக்கும்
தேர்வின் வெற்றிக்கும் அச்சாரமாகி
கற்றலின் வித்தைகளைக் கச்சிதமாக்கி
அற்புதமாய் அள்ளித் தந்து
கல்வி ஒளியூட்டிய வழிகாட்டிகள் ஆசான்களே !

கல்வியொடு ஒழுக்கத்தையும் பண்பினையும்
கண்ணியமாய் எமக்களித்து
வெற்றுத் தாளாய் இருந்த எமை
புள்ளிக்கோலம் போட வைத்து
அழகு பார்த்த ஆசான்களே – நீவிர்
பண்ணிய தியாகங்கள் எண்ணிலடங்கா
ஒளியூட்டிய வழிகாட்டிகளே நன்றி உமக்கு !

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் வரலாறு பலபாகம் வழிகூறும் பலகாலம் தமிழ்ப்பள்ளி உருவாக்கம் தரணிக்கே தனிமகுடம் உறவுகள் ஓன்றாகும் உயிர்ப்பு மொழி தமிழாகும் அடுத்த தலைமுறையும்...

    Continue reading

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading