23
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16-06-26
உழைக்கும் கைகளின் சுமையே
இலக்கை எட்டுகையில் சுகமே
நினைக்க இனிக்கிறது தினமே
நிழலாய்...
23
Jul
சிறகடிக்கும் நினைவலைகள்
இரா.விஜயகௌரி
சிந்தனைச் சுழல் விரிய
செம்மையுறும் எழில் பொழிய
விந்தையென நினைவில் எழும்
வீரியத்தின் சுந்தரங்கள்
எந்தையும் தாயும் இணை
கனவெழுதும்...
23
Jul
நெருப்பு நினைவுகள்…..
ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026
இன்றையநாள் யூலை இருபத்திமூன்று
அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள்
கனதியாய்...
ரஜனி அன்ரன்
“ கார்த்திகையாள் வரவு “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.11.2023
கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள்
கலகலவென விழித்து விட்டாள்
மழை வெயில் குளிரென
மத்தாப்பைத் தாங்கி நின்று
முத்தாப்பாய் வந்து விட்டாள் !
காலநிலையும் எழிலூட்ட
காற்றலைகள் மோதிவர
கார்காலம் மழை பொழிய
கணகணப்பும் கூடிவர
கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் !
மழைச் சாரல் அடித்துவிட
மரக்கிளைகள் இலை உதிர்க்க
மஞ்சள் வர்ண இலைகளும் தான்
மண்ணினை அலங்கரிக்க
மலரினமும் மயங்கிவிழ
மலர்ந்து விட்டாள் கார்த்திகையாள் !
கார்த்திகை மைந்தர்களை
கல்லறைக் காவியரைத் துயிலெழுப்ப
காந்தள் கொண்டு வந்துவிட்டாள்
காரிகையாம் கார்த்திகையாள்
கனதியான நினைவுகளும் காட்சியாகுதே !
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...