சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ கார்த்திகையாள் வரவு “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 02.11.2023

கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள்
கலகலவென விழித்து விட்டாள்
மழை வெயில் குளிரென
மத்தாப்பைத் தாங்கி நின்று
முத்தாப்பாய் வந்து விட்டாள் !

காலநிலையும் எழிலூட்ட
காற்றலைகள் மோதிவர
கார்காலம் மழை பொழிய
கணகணப்பும் கூடிவர
கார்த்திகையாள் மலர்ந்து விட்டாள் !

மழைச் சாரல் அடித்துவிட
மரக்கிளைகள் இலை உதிர்க்க
மஞ்சள் வர்ண இலைகளும் தான்
மண்ணினை அலங்கரிக்க
மலரினமும் மயங்கிவிழ
மலர்ந்து விட்டாள் கார்த்திகையாள் !

கார்த்திகை மைந்தர்களை
கல்லறைக் காவியரைத் துயிலெழுப்ப
காந்தள் கொண்டு வந்துவிட்டாள்
காரிகையாம் கார்த்திகையாள்
கனதியான நினைவுகளும் காட்சியாகுதே !

Nada Mohan
Author: Nada Mohan