ரஜனி அன்ரன்

கல்லறைவீரர் கனவிதுவோ…..! கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.11.2023

விடியல் கனவினை விழிகளில் ஏந்தி
தாயகக் கனவினை நெஞ்சினில் சுமந்து
இலக்கினை நோக்கிய இலட்சியக் கனவோடு
செங்களமாடி வெஞ்சமர் புரிந்த வீரமறவர்களே
உம் கனவும் நினைவும் தாயகக் காதலே !

உரிமையை வெல்ல ஒற்றுமையைப் பலமாக்க
உலகே வியந்துநிற்க உயிர்த்தியாகம் செய்த உன்னதரே
தியாகத்திலும் தியாகம் அல்லவா உங்கள் தியாகம்
தேகத்தை ஈகம் செய்த தேசமறவர்களே
கல்லறைத் தொட்டிலில் தூங்கிடும் தூயவரே
உங்கள் கனவும் நினைவும் தாயகக் காதலே !

தடைகளைப் பொடியாக்கி உடலை வெடியாக்கி
வீரத்தை துணிவாக்கி வேகத்தை வலுவாக்கி
தணியாத மண்தாகம் குறையாத தமிழ்மோகம்
உரமான உரிமையென உம்கனவுகளோ கோடி
கோடி கனவுகளைச் சுமந்தபடி – நீவிரும்
குழிகளிலே தூங்குகின்றீர் தவிப்போடு – இன்னமும்
ஒட்டுமொத்த எம்மினமும் ஒற்றுமையுமில்லை
ஒருமைப்பாடுமில்லை உரிமைகளும் தானுமில்லை
உங்கள் இலட்சியக் கனவுகளும் கானல் நீராச்சே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading