சித்திரா பருவம் 760 30.04.2026

செல்வி நித்தியானந்தன் சித்திரா பருவம் அன்னையருக்கு வருடம் ஒருமுறை அழகாய் வந்திடும் விரதமாகும் ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி அகமே நிறைந்து...

Continue reading

பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ரஜனி அன்ரன்

கல்லறைவீரர் கனவிதுவோ…..! கவி….ரஜனி அன்ரன் (B.A) 23.11.2023

விடியல் கனவினை விழிகளில் ஏந்தி
தாயகக் கனவினை நெஞ்சினில் சுமந்து
இலக்கினை நோக்கிய இலட்சியக் கனவோடு
செங்களமாடி வெஞ்சமர் புரிந்த வீரமறவர்களே
உம் கனவும் நினைவும் தாயகக் காதலே !

உரிமையை வெல்ல ஒற்றுமையைப் பலமாக்க
உலகே வியந்துநிற்க உயிர்த்தியாகம் செய்த உன்னதரே
தியாகத்திலும் தியாகம் அல்லவா உங்கள் தியாகம்
தேகத்தை ஈகம் செய்த தேசமறவர்களே
கல்லறைத் தொட்டிலில் தூங்கிடும் தூயவரே
உங்கள் கனவும் நினைவும் தாயகக் காதலே !

தடைகளைப் பொடியாக்கி உடலை வெடியாக்கி
வீரத்தை துணிவாக்கி வேகத்தை வலுவாக்கி
தணியாத மண்தாகம் குறையாத தமிழ்மோகம்
உரமான உரிமையென உம்கனவுகளோ கோடி
கோடி கனவுகளைச் சுமந்தபடி – நீவிரும்
குழிகளிலே தூங்குகின்றீர் தவிப்போடு – இன்னமும்
ஒட்டுமொத்த எம்மினமும் ஒற்றுமையுமில்லை
ஒருமைப்பாடுமில்லை உரிமைகளும் தானுமில்லை
உங்கள் இலட்சியக் கனவுகளும் கானல் நீராச்சே !

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading