ரஜனி அன்ரன்

“ உயிர்நேயம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.12.2022

மனிதம் பேண வர்க்க பேதமின்றி
மனிதநேயத்தோடு உயிர்நேயம் காத்து
மாந்தரை மாந்தராய் மதித்து
மனுக்குலத்தை நேசித்து
உயிர்நேயம் பேணலே
மனித உரிமையின் தார்மீகம் !

இன்னல்கள் நேரும் போதெல்லாம்
தன்னலம் இன்றியே
மன்னுயிர்களையும் காத்து
சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து
மனுக்குலத்தை நேசிப்போம்
மறவாது காத்திடுவோம் உயிர்நேயம் !

ஜனநாயகத்தின் ஆணிவேர் மனிதஉரிமை
மனித உரிமைக்கு அடிநாதம் உயிர்நேயமே
மனித உரிமையே மானிடர்க்குப் பெருமை
உன்னதமானது உயிர்நேயம்
உயிர்நேயம் காத்தல் மாந்தர் கடமை !

உயர்வு தாழ்வு ஒழியட்டும்
உன்னத தர்மம் நிலைக்கட்டும்
உயிர்நேயம் வளரட்டும்
மலரட்டும் மண்ணில் மனிதநேயம்
காத்திடுவோம் என்றும் உயிர்நேயம் !

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading