சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ உயிர்நேயம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 08.12.2022

மனிதம் பேண வர்க்க பேதமின்றி
மனிதநேயத்தோடு உயிர்நேயம் காத்து
மாந்தரை மாந்தராய் மதித்து
மனுக்குலத்தை நேசித்து
உயிர்நேயம் பேணலே
மனித உரிமையின் தார்மீகம் !

இன்னல்கள் நேரும் போதெல்லாம்
தன்னலம் இன்றியே
மன்னுயிர்களையும் காத்து
சமூகத்தோடு ஒன்றி வாழ்ந்து
மனுக்குலத்தை நேசிப்போம்
மறவாது காத்திடுவோம் உயிர்நேயம் !

ஜனநாயகத்தின் ஆணிவேர் மனிதஉரிமை
மனித உரிமைக்கு அடிநாதம் உயிர்நேயமே
மனித உரிமையே மானிடர்க்குப் பெருமை
உன்னதமானது உயிர்நேயம்
உயிர்நேயம் காத்தல் மாந்தர் கடமை !

உயர்வு தாழ்வு ஒழியட்டும்
உன்னத தர்மம் நிலைக்கட்டும்
உயிர்நேயம் வளரட்டும்
மலரட்டும் மண்ணில் மனிதநேயம்
காத்திடுவோம் என்றும் உயிர்நேயம் !

Nada Mohan
Author: Nada Mohan